×

சேலத்தில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறால் இளைஞர்கள் மீது தாக்குதல்

சேலம்: சேலத்தில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறால் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றன. ஓமனுரில் உள்ள டாஸ்மாக் கடையில் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த சூரியா என்பவர்  மூன்று நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது சூரியா தரப்பினருக்கும் மது அருந்திய மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சூரியா மற்றும் அவரது நண்பர்கள் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் நின்றுள்ளன. அப்போது 5 இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல் அவர்களை சரமாரியாக அடித்து உதைக்க தொடங்கியது. மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து ஓமனுர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dispute ,store ,Salem , Taskmoo, shop, alcohol, drinking, when, during, dispute
× RELATED ஒடிசாவில் போஸ்டர் தகராறில் பாஜ தொண்டர் குத்தி கொலை